இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குருணாகல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதன்படி, குறித்த மாவட்டத்தில் வெப்பநிலை 36.9 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், புத்தளம் மாவட்டத்தில் 36.7 பாகை செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் வெப்பநிலை 33.5 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments: