News Just In

3/21/2024 07:28:00 AM

யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையை இலங்கை அரசிடம் சமர்ப்பித்த புலம்பெயர் அமைப்பு !யாழ். இந்துக்கல்லூரி மாணவன்



இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையை உலக தமிழர் பேரவை இலங்கை அரசிடம் சமர்பித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்துக்களின் விவாதச் சமர் என வர்ணிக்கப்படும் சொல்லாடல் - 2024 விவாதப்போட்டியில், யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஒருவர் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்களும், கொழும்பு இந்துக்கல்லூரி மாணவர்களும் தமது விவாத திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இந்துக்களின் சமர் - சொல்லாடல் போட்டியில் மாணவர்கள் தெரிவித்த கருத்துக்களானது புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் வாத பிரதிவாதங்களை எழுப்பியிருந்தது

No comments: