News Just In

2/11/2024 08:35:00 PM

புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் பாதை திருத்தப்பணிகளுக்காக நாளை காலை வரை மூடப்படும்!




அதிவேக நெடுஞ்சாலையின் புதிய களனி பாலத்திலிருந்து துறைமுகத்தை நோக்கிய பாதையில் நாளை (12) அதிகாலை 05.00 மணி வரை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கட்டுநாயக்காவிலிருந்து களனி பாலம் வரையான பாதை மாத்திரமே மேற்படி தினங்களில் மூடப்படும் என்றும், துறைமுகத்திற்கு பிரவேசித்து செல்லும் பாதையும், ஒருகுடவத்தை சந்தியிலிருந்து களனி பாலத்திற்கு பிரவேசிக்கும்; (இங்குரு கடை சந்தி) பாலத்தின் நடுவில் இருந்து மூடப்படும்.

இதன் காரணமாக அவ்விடத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கியும், கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்க முடியும். எனினும் துறைமுகத்தை நோக்கி பயணிக்க முடியாது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

No comments: