இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவுதினம் நாளை திங்கட்கிழமை (8) காலை 10 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நினைவேந்தலை முன்னெடுக்கவுள்ளது.
அதன்படி, நாளை காலை 10 மணிக்கு மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு கடத்தப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ளுமாறு ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரமுகர்கள், மதத்தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments: