News Just In

1/21/2024 06:14:00 AM

வானிலை முன்னறிவித்தல்!



வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றுயிலிருந்து (21) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - சிறிதளவில் மழை பெய்யும்.

மட்டக்களப்பு - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.

கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை.

காலி - பிரதானமாக சீரான வானிலை.

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை.

கண்டி - சிறிதளவில் மழை பெய்யும்.

நுவரெலியா - சிறிதளவில் மழை பெய்யும்.

இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை

திருகோணமலை - சிறிதளவில் மழை பெய்யும்

மன்னார் - பிரதானமாக சீரான வானிலை.

No comments: