News Just In

1/20/2024 03:25:00 PM

ராமர் கோயில் கும்பாபிஷேகம் | மேற்கு வங்கத்தில் ஜன.22 அன்று விடுமுறை அறிவிக்க மம்தா பானர்ஜிக்கு மாநில பாஜக தலைவர் வலியுறுத்தல்


கொல்கத்தா: அயோத்தியில் ஜன.22-ம் தேதி நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் மேற்கு வங்க மக்கள் பங்கேற்றுக் கொண்டாடும் வகையில் அன்றைய தினம் விடுமுறையாக அறிவிக்கும் படி முதல்வர் மம்தா பானர்ஜியை கடிதம் மூலமாக மாநில பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தை பகிர்ந்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜன.22ம் தேதி மேற்கு வங்கத்தில் பள்ளிகளில் விடுமுறை அறிவிப்பதை தயவுசெய்து பரிசீலனை செய்யுமாறு முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதன்மூலமாக மேற்கு வங்க இளைஞர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுக் கொண்டாடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

No comments: