News Just In

12/08/2023 06:55:00 PM

சர்வதேச மனக்கணித போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்ற மட்டக்களப்பு சிறுமி!



மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அஷ்தா என்ற மாணவி 3ம் இடத்தை பெற்றுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் பி.எம்.எச்.இல் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர் பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற அஷ்தா சர்வதேச மனக்கணித போட்டியில் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த சர்வதேச போட்டி கடந்த 3ஆம் திகதி மலேசியாவில் இடம்பெற்றிருந்த நிலையில் 80க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்துகொண்டதுடன் 6 வயதுடைய அஷ்தா போட்டியில் கலந்து கொண்டு 3ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவியான மாமாங்கம் யுசிமாஸ் மனக்கணித கல்வி நிலையத்தில் கற்றுவரும் இவர் செங்கலடியைச் சேர்ந்த தமிழ்செல்வன் நிதர்சினி தம்பதிகளின் மூத்த புதல்வியுமாவார்.

No comments: