மட்டக்களப்பில் நேற்றையதினம் பொரும் குழப்பநிலையை தோற்றுவித்திருந்த விடயமாக அம்பிட்டிய சுமன ரத்ன தேரரின் போராட்டம் காணப்பட்டது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனையும் அவரது அரசியல் செயற்பாடுகளையும் கடுமையான வார்த்தைகள் கொண்டு விமர்சித்திருந்தார்.
இதன்போது ஒரு சந்தர்ப்பத்தில் “எமது பிள்ளையான் அமைச்சர் எமக்கு ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. எனினும் இந்த சாணக்கியன் என்ற மனிதன் எப்போதும் நாடாளுமன்றம் சென்று சிங்களவர்களை தாக்குகின்றார்.
மற்றுமொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார்(வியாழேந்திரன்). அவரும் ஒரு போதும் சிங்களவர்களை தாக்கியதில்லை.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments: