News Just In

6/27/2023 07:47:00 AM

இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் மக்கள்!

வவுனியா மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காண கூடியதாக உள்ளது.

இதேவேளை, வவுனியா நகர மத்தியில் உள்ள இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றதுடன் எரிபொருள் பம்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் வரிசையில் காத்து நிற்கின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

விநியோகஸ்தர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத இருப்பை வைத்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர Kanchana Wijesekera கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் வவுனியாவில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றன.

No comments: