
(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர்ஏ.ஜே. முஸம்மில் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்தார்.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப் பட்டது.
மேலும் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத் துள்ளார்.
No comments: