News Just In

5/22/2023 07:41:00 AM

விராட் கோலியின் சதம் வீண் - பிளே ஒப் சுற்றுக்கு தெரிவானது மும்பை அணி!

நேற்று இரவு நடைபெற்ற குஜராத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதை அடுத்து மும்பை அணி நான்காவது அணியாக பிளே ஒப் சுற்றுக்குள் சென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று இரவு பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்தது.

இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் துடுப்பாட்டம் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் எடுத்தது. விராட் கோலி 101 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனை அடுத்து 198 என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி விளையாடி நிலையில் சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். விஜய் சங்கர் 53 ஓட்டங்கள் எடுத்தார்.

நேற்றைய போட்டியில் குஜராத் அணி வென்றதை அடுத்து 16 புள்ளிகள் பெற்ற மும்பை அணி பிளே ஒப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணியும், 24ஆம் திகதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணியும் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: