News Just In

5/22/2023 08:02:00 AM

கிளிநொச்சி பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் நியமனம் தொடர்பில் மக்கள் போராட்டம்!




கிளிநொச்சி பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் சின்னையா சிவரூபனை மீண்டும் நியமிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் பளை வைத்தியசாலை முன்பாக நேற்று (21.05.2023) இடம்பெற்றது.இதன்போது குறித்த வைத்தியரை மீண்டும் கடமையில் அமர்த்துவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வே்ணடும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஊடகங்களிற்கு மக்கள் கருத்து தெரிவித்தனர். குறித்த வைத்தியர் கடந்த (18.08.2019) அன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த (09.02.2023)ஆம் திகதி எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடரந்து குறித்த வைத்தியசாலையில் பதில் கடமையில் ஈடுபட்டுவரும் நிலையில், குறித்த வைத்தியரை பொறுப்புக்களுடன் மீண்டும் நியமிக்கக் கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: