News Just In

5/09/2023 11:34:00 AM

களுத்துறை பாடசாலை மாணவி மரணம் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது!





களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ளுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு 29 வயதுடைய நபர் 16 வயது சிறுமியுடன் சென்றுள்ளார்.

களுத்துறை-தெற்கு காலி வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் பாதைக்கு அருகில் 16 வயது சிறுமியின் சடலம் சனிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வாலிபர் மேலும் மூன்று பேருடன் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞன் ஒரு இளைஞனுடனும் மற்றுமொரு இளம் தம்பதியுடனும் வந்து ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹோட்டலில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்திருந்த போதிலும், நான்கு பேரும் ஒரே அறையில் மது அருந்துவதை ஹோட்டலின் ஊழியர் ஒருவர் அவதானித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், தம்பதியினர் ஹோட்டலை விட்டு வெளியேறியதை அடுத்து சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு மற்ற நபரும் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் அவதானித்துளனர்.

இதையடுத்து, ஐந்து மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படும் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த சிறுமி நாகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
விசாரணைகளை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சென்ற 19 வயது சிறுமி மற்றும் 22 மற்றும் 29 வயதுடைய இரு ஆண்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

No comments: