News Just In

4/11/2023 07:50:00 AM

நாட்டில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அதிகாரசபை!

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஒளிபரப்பு அதிகார சபையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று(10.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ஒளிபரப்பு ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை சமர்பிப்பதற்கான வரைவுத் தயாரிப்பிற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: