News Just In

4/24/2023 08:05:00 AM

நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இராணுவ சிப்பாய்!

இராணுவ சிப்பாய் ஒருவர் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் நாவுல, மொரகஹகந்த பகுதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரலகொல்ல இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் எல்பிட்டிய பிரசேத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரென தெரிவந்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பத்து இராணுவ சிப்பாய்களில் ஒருவர் காணாமல் போயிருந்தமையினால் ஏனையோர் தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்போது நீர்த்தேக்கத்தின் அணைக்கு கீழே 300 மீற்றர் ஆழத்தில் நீர் பாயும் பாலத்தின் அடியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாவுல காவல்துறையினர் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: