News Just In

4/10/2023 12:16:00 PM

தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் இன்று!





தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் பங்கேற்கும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியாவில் இன்று (10.04.2024) காலை 10.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போன்றவற்றிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தத் தமிழ்த் தேசியக் கட்சிகளும், மத மற்றும் சிவில் அமைப்பினரும் தீர்மானித்திருந்தனர்.

இதற்கான முதலாவது கலந்துரையாடல் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

இதன்போது மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைத்து போராட்டங்களை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

7 தமிழ் அரசியல் கட்சிகளும், பல்வேறு பொது அமைப்புக்களும் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: