News Just In

2/09/2023 02:05:00 PM

நாளை மறுதினம்யாழ் வரும் ஜனாதிபதி!





ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.யாழில் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், அதற்கான ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் கடற் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்ததில் தற்போது இடம்பெறுகின்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் , வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர், பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி , யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் பிரதிநிதிகள் பிரதேச செயலர்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் ஊடகவியலாளர்களான கந்தசாமி பரதன், சின்னத்தம்பி தங்கவேலு சுமன், ராமச்சந்திரன் கலையமுதன் ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை தைபொங்கல் நிகவுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நிலையில் மீண்டும் அவர் யாழிற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: