News Just In

2/14/2023 09:43:00 PM

பிரபாகரன் உயிருடன் இல்லை உலக தமிழர் பேரவையின் தலைவர்!





தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என்று உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமான பிபிசிக்கு அவர் வழங்கிய செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பழ. நெடுமாறன் வெளியிட்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நான் முன்பே சொல்லியிருக்கின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் லட்சியங்கள் இருக்கக்கூடும். அது வேறு. ஆனால், அவர் இருக்கின்றார் என்று சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.

அவ்வாறான கருத்து பிழை என்றே நான் சொல்வேன் என்றும் அருட்தந்தை இமானுவேல் சுட்டிக்காட்டினார்.

No comments: