
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவது தேர்தலை நடத்துவதற்கு தடையாக இருக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.
பரவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காக காலத்தை விரயம் செய்வதில் பலனில்லை.உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகிறது.
ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தலை நடத்துவதற்கு தடையேற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: