News Just In

12/16/2022 01:35:00 PM

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மீளமீண்டும் ஆரம்பம்!




சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அதற்கான கொடுப்பனவுகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், சுத்திகரிப்பு நிலையத்தின் தொட்டி வளாகத்திற்கு கச்சா எண்ணெய் இறக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலையான உற்பத்தியைப் பேணுவதற்காக மேலும் 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்குத் தேவையான கொள்முதல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை முழு வீச்சில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.

No comments: