News Just In

11/17/2022 06:03:00 AM

யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்த இளைஞன் மாயம்!

யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி வருகின்றனர்.

எனினும் குறித்த இளைஞனை காணவில்லை. இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: