News Just In

10/27/2022 07:36:00 AM

இலங்கையில் மின் கட்டணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் கடந்த 2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் மின்சார பாவனையாளர்களிடமிருந்து சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறவிடுவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி எவ்வாறு மின்சார கட்டணங்களை பாதிக்கிறது என்பது பற்றி இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தின்படி, இலங்கை மின்சார சபையின் மின்சாரம் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு உட்பட்டது.

அதன்படி, இலங்கை மின்சார சபையில் மின்சாரம் பெறும் தரப்பினரால் மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு மேற்படி வரி அறவிடப்படுகிறது.

No comments: