இறக்குமதி செய்யப்பட்டுள்ள 50 கிலோ கிராம் யூரியா உர மூடை ஒன்றை 10ஆயிரம் ரூபாவுக்கு நெல் விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக பெரும் போகத்திற்கான தேவையை பூர்த்தி செய்ய போதியளவு கையிருப்பு உள்ளதாக விவசாய அமைச்சர் உறுதி செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments: