News Just In

10/23/2022 06:20:00 PM

ஹோட்டல் ஒன்றில் கைதான யாழை சேர்ந்த 43 பேர்!

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் இன்று (23-10-2022) அதிகாலை கைது செய்யப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்காக குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.

இந்த 43 பேரும் யாழ். மாவட்டத்தில் வசிப்பவர்கள் எனவும், அவர்களில் 33 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மாத காலமாக வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்த இக்குழுவினர் 5 நாட்கள் சுற்றுலா செல்வதாக கூறி நேற்று வவுனியாவில் இருந்து காலி உனவட்டுன வரை பஸ்சில் சென்று ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments: