News Just In

8/26/2022 11:10:00 AM

அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிபந்தனை! நிதியமைச்சின் அறிவிப்பு!





அரச ஊழியர்களுக்கு நிதியமைச்சினால் கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாதாந்தம் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டிய டொலர்கள்

சுற்றறிக்கையின் படி, தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும்அரச ஊழியர்களில்  ஆரம்ப நிலை ஊழியர்கள் 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை ஊழியர்கள் 200 அமெரிக்க டொலர்களும், மூன்றாம் நிலை ஊழியர்கள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் மாதாந்தம் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையிலுள்ள வங்கிக் கட்டமைப்பு ஊடாக தமது பெயரில் உள்ள வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு பணத்தை அனுப்ப வேண்டும்.




அரச ஊழியர்கள் தங்களது சிரேஷ்டத்துவத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளில் தொழிலை மேற்கொள்ளலாம் எனவும் சம்பளமற்ற விடுமுறை காலம் நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் அரச சேவையில் இணையலாம் .

No comments: