News Just In

8/26/2022 10:59:00 AM

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் இராமகிருஷ்ண மிஷனுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!!



A to Z Media

மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் அமைப்புக்கு மரக்கன்றுகள் புதன் கிழமை(24) வழங்கி வைக்கப்பட்டது.

வீட்டுத் தோட்ட செய்கையை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்கில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் தென்னம்பிள்ளைகள் மற்றும் மஞ்சள் கன்றுகள் உள்ளடக்கிய 50 மரக்கன்றுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் பொதுமுகாமையாளர் சுவாமி தக்‌ஷஜானந்தஜீ மஹராஜ் அவர்களிடம் பிரதேச செயலக அதிகாரிகள் குறித்த மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.



No comments: