News Just In

8/17/2022 07:55:00 PM

சீன கப்பல் விவகாரம் - இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து !




இலங்கைக்கு சீன கப்பல் சென்றுள்ளதால் உருவாகியுள்ள சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர்சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அயலில் என்ன நடந்தாலும் எங்கள் பாதுகாப்பு மீது தாக்கத்தை செலுத்தக்கூடிய என்ன சூழ்நிலை உருவானாலும் அது எங்களின் கரிசனைக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் நலன்கள் மீது தாக்கத்தை செலுத்தக்கூடிய எந்த விடயத்தையும் நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் என எங்கள் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தாய்லாந்தில் தெரிவித்துள்ளார்.

No comments: