News Just In

7/11/2022 07:14:00 PM

கோட்டாபய இலங்கையை விட்டு வெளியேறிய விவகாரம்! பல்டியடித்தார் சபாநாயகர்!

கோட்டாபய ராஜபக்ச இன்னும் இலங்கையில் தான் இருக்கின்றார் என நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றில் அரச தலைவர் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தவறுதலாக கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியதாகவும் அவர் இன்னும் இலங்கையில் தான் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கோட்டபாய ராஜபக்ஷ தம்முடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை உறுதிப்படுத்திய சபாநாயகர், எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் கோட்டபாய மீண்டும் நாடு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார்.

கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அது உச்சம் கண்டிருந்தது.

இதன்போது அரச தலைவர் மாளிகை மற்றும் செயலகம் என்பன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: