அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் இன்று (13) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு ஒளிபரப்பை இடை நிறுத்தி தமது போராட்டத்தின் குறிக்கோளை நேரலையாக தெரிவித்தனர்.
இதையடுத்து இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி ஒளிபரப்பு சிறிது நேரம் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: