ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியில்லை என தெளிவுபடுத்தும் பதிவுகளை சட்டத்தரணிகள் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
அவசரகால சட்டம் சட்டவிரோதமானது என சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் கீழ் ஜனாதிபதி பதவி வெற்றிடமான பின்னரே பிரதமர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது இடம்பெறவில்லை கைதுகள் சட்டவிரோதமானவை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி நியமித்தாலோ அல்லது அவர் பதவி விலகினாலோ மாத்திரம் பிரதமர் பதில் ஜனாதிபதியாகலாம் என சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
No comments: