சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு வழிவிட்டு இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (11) காலை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
சர்வக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டவுடன், அந்த அரசாங்கத்திடம் தமது பொறுப்புக்களை ஒப்படைக்கத் தயார் என கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர்கள் அனைவரும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
7/11/2022 01:39:00 PM
அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்: எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: