News Just In

6/11/2022 07:34:00 PM

கல்வி நடவடிக்கை ஸ்தம்பிக்கலாம்! இரு மடங்காக உயர்ந்த விலை!



எதிர்காலத்தில் பயிற்சிப் புத்தகங்களுக்கும், அச்சிட்ட புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி புத்தகங்கள், பள்ளி பைகள், காலணிகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.

நாட்டில் கடதாசி தட்டுப்பாடு நிலவி வருவதால், பயிற்சி புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் அதிகரிக்கும் விலைபல வகையான பயிற்சிப் புத்தகங்களின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களிடம் பயிற்சிப் புத்தகங்கள் விற்பனைக்கு இல்லை என்றும், புதிதாக கொள்வனவு செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

50 ரூபாயாக இருந்த 80 பக்க பயிற்சி புத்தகத்தின் விலை தற்போது 110 ரூபாயாகவும், 70 ரூபாயாக இருந்த 120 பக்க புத்தகத்தின் விலை 130 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இந்தப் பயிற்சிப் புத்தகங்களின் விலை புத்தகத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும், மேலும் சில புத்தகங்களின் விலை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரூ.3 முதல் ரூ.5 வரை இருந்த நகல் பெறுவதற்கான கட்டணம் தற்போது ரூ.12 ஆக அதிகரித்துள்ளது.

விலைவாசி உயர்வு, காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பயிற்சி புத்தகங்கள் மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது, மேலும் பல புத்தக வெளியீட்டாளர்கள் காகித பற்றாக்குறையால் புதிய புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திவிட்டனர்.

No comments: