News Just In

6/11/2022 07:26:00 PM

பொது இடங்களில் முகக்கவசம் அணியுங்கள் – ராஜித கோரிக்கை





பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிவதற்கான கட்டாயத் தேவையை நீக்குவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் நாட்டில் தற்போது மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதியான நோயாளி மேலும் சிரமத்தை எதிர்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.

No comments: