மட்டக்களப்பு வாழைச்சேனையில் விசேட தேவையுடையோரை பராமரித்துவரும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு ஒரு மாத்திற்கு தேவையான உலருணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வானது நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கடற்தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளின் பேரில் புதிய தலைமுறை ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்பில் குறித்த உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 3 இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் விசேட தேவையுடையோரை பராமரிக்கும் நோக்கத்திற்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: