News Just In

6/11/2022 07:49:00 AM

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இரு குடும்ப பெண்களின் உயிரிழப்பு!

யாழில் கடந்த சில நாட்களில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

யாழ்.மருதங்கேணி உடுத்துறை பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது 43) என்ற பெண் கடந்த 08 ஆம் திகதி தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் இவர் யாழ்ப்பாணம் சென். சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து வந்த நிலையில், சுகவீனம் காரணமாக ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை யாழ். உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுதாகரன் துளசிகா (வயது 28) என்பவர் கடந்த 6 ஆம் திகதி தீ காயங்களுக்கு உள்ளனர்.

பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இரு தினங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 8ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: