News Just In

6/07/2022 06:24:00 AM

கொழும்பு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் தற்போதைய நிலை! கொந்தளிப்பில் மக்கள்

இலங்கை மக்கள் அண்மைக்காலமாக நாளாந்தம் மின்வெட்டு பாதிப்பால் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இன்றைய தினம் (07-06-2022) முதலாவது ரி20 போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக மின் விளக்குகள் ஒளிர விடப்பட்டு வர்ணமயமாக கொழும்பு ஆர் பிரேமதாச மைதானம் காணப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் நாளாந்தம் மின்வெட்டால் கஷ்டப்படும் நாட்டு மக்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: