பொதுவாவே நம்மில் பலர் பொதுக்கழிப்பறைகளை விரும்புவதில்லை, அவை போதியளவு சுகாதாரமான முறையில் இருப்பதில்லை என்பதே இதற்கான காரணமாகும்.
இந்நிலையில் இளைஞன் ஒருவர் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள பொது கழிப்பறையொன்றை சுத்தம் செய்து அழகாக மாற்றியுள்ளார்.
சப்ரான் என அழைக்கப்படுகின்ற குறித்த இளைஞன் தனது முயற்சியால் பொது கழிப்பறையை வர்ண பூச்சாடிகள், கால் துடைப்பங்கள், அழகு வர்ணங்கள் என பல வேலைப்பாடுகள் மூலம் அழகாக மாற்றியுள்ளார்.
நாட்டின் நாலா பக்கமும் உள்ள பல இலட்சம் மக்கள் அன்றாடம் வந்து செல்லும் இடமாகிய புறக்கோட்டை, சாமஸ் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள பொது கழிப்பறை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது.
கதவுகள் உடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது. எனினும் தற்போது அது முழுமையாக மாற்றமடைந்து அழகாக காட்சியளிக்கிறது.
அங்கு சென்ற பெண் ஒருவர் அதனை புகைப்படமாக எடுத்து சப்ரான் என்ற இளைஞனின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
சப்ரான் என்ற இளைஞனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
No comments: