News Just In

5/21/2022 06:19:00 AM

எதிர்ப்பை வெளியிடாத பொன்சேகா!

அண்மைய வன்முறைச் சம்பவங்களினால் வீடு மற்றும் உடைமைகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குவதில் தாம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் கோட்டாகோகம' போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அதன் பின்னர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் ஒருவருக்கு ஒருவர் பணகொடுக்கல் வாங்கல் செய்யப்படாமல் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: