அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சிறுவர் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகினர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், அவர் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் என்றும் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் கூறுகின்றன.
இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் நோயாளர்காவுவண்டி மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைத் தவிர எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
No comments: