News Just In

4/25/2022 12:35:00 PM

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு




நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, குறித்த மூன்று நாட்களிலும் A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

அத்துடன் கொழும்பு நகர் பகுதியில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்படுத்தவும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

No comments: