News Just In

3/21/2022 06:33:00 AM

இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போன்று பஞ்சம் ஏற்படலாம்!

இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தீர்க்கதரிசனம் அற்ற செயற்பாடுகளால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் பெரும் பாதிப்பை சந்தித்திருப்பவர்கள் பெண்களே.

அவர்கள் ஏற்கனவே குடும்ப தலைவிகளாக செயற்பட்டு வருகின்ற நிலையில் இந்த பொருளாதார பின்னடைவு காரணமாக பெரும் பாதிப்பை அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள்.

பெண்களுடைய பால் நிலை சமத்துவத்தை நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று அந்த சமத்துவம் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. இன்று இலங்கையில் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றார்கள்.

குறிப்பாக எங்களுடைய மலையக பெண்களின் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது. வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்புகின்றவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளதார்.

No comments: