News Just In

1/10/2022 02:18:00 PM

நாட்டின் பிரதான வீதிகளில் யானைகளால் ஆபத்து!


தம்புள்ளை – ஹபரன பிரதான வீதியின் திகம்பத்தஹ பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று 24 மணித்தியாலமும் வீதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.குறித்த யானை அந்த வீதியில் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி உணவு பெற்றுக் கொள்வதற்கு பழக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களில் பாரிய ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென வீதியில் பயணிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக குறித்த யானைக்கு வீதியில் பயணிப்பதவர்கள் ஏதாவது ஒரு உணவை வழங்குவதற்கு பழகியுள்ளார்கள். அத்துடன் வேறு பகுதிகளில் உள்ளவர்கள் இந்த யானைக்கு பழங்கள், மரக்கறிகள் போன்றவற்றை கொண்டுவந்து வழங்கி வருவதாகவும் தெரிய வருகிறது.

இந்த யானை, வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டவுடன் அதற்கு அருகில் சென்று உணவை பெற பழகியுள்ளது. உணவு வழங்காத வாகனங்களை பின்னால் துரத்தி செல்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் கட்டாயம் ஏதாவது ஒரு உணவுடன் அந்த வீதியில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த யானை கேட்டு வாங்கி உண்பதனால் இது ஆபத்தான விடயமாக மாறிவிடும் என வனவிலங்குதிணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு வழங்காத சாரதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

No comments: