News Just In

11/03/2021 07:16:00 AM

சிறுவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றல் குறித்த விசேட அறிவிப்பு! - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணரட்ன

சிறுவர்களுக்கு முழுமையான அளவில் தடுப்பூசி ஏற்றுவது குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணரட்ன (Dr. Asela Gunawardena) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

12 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு ஒரு மாத்திரை பைசர் தடுப்பூசி ஏற்றினால் அது முழுமையாக தடுப்பூசி ஏற்றலுக்கு நிகரானது என தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பைசர் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட சிறுவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்கள் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் என்ற வகையீட்டுக்குள் உள்ளடக்கப்படுவர் என குறிப்பிடப்படுகின்றது.

No comments: