News Just In

11/08/2021 06:43:00 AM

சீரற்ற கால நிலை 9ஆம் திகதிவரை நீடிக்கக்கூடும்!

மழையுடன் கூடிய கால நிலை தரை நிலப்பகுதியில் தொடர்வதுடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

இந்த சீரற்ற கால நிலை இன்று தொடக்கம் 9ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments: