News Just In

11/18/2021 03:03:00 PM

இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கிருமித் தொற்று நீக்கிகள் 10 பாடசாலைகளுக்கு வழங்கிவைப்பு!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கிருமித் தொற்று நீக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ROTARY CLUB OF COLOMBO MIDCITY கொழும்பு நகர மத்தி றோட்டரிக் கழகத்தின் நிதி அனுசரணையில் இந்நிகழ்வு வியாழக்கிழமை (18.11.2021) சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் அப்பாடசாலை அதிபர் எம். சிவசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கோறளைப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 10 பாடசாலைகளுக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான கிருமிதொற்று நீக்கிகள் கையளிக்கப்பட்டன.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் பொதிகளை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்களிடம் கையளித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மேற்கு வலய மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அலுவலகம் ஏறாவூர் பற்று கோட்டம் ஆகியவற்றில் தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளுக்கு கடந்த திங்கட்கிழமை 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கிருமித் தொற்று நீக்கிகள் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

.எச்.ஹுஸைன்




No comments: