News Just In

11/18/2021 03:08:00 PM

வடமாகாண ஆளுநர் எடுத்துள்ள அதிரடித் தீர்மானம்!

வடமாகாண அரச நிர்வாகத்தில் மக்களிடம் பாகுபாடு காட்டப்படுமானால் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

நிர்வாக அலகுகளில் பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் பாரபட்சம் காட்டப்படுவதாக ஆளுநருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயங்களை தொடர்பில் ஆராய்ந்துவரும் ஆளுநர் அவ்வாறு நிர்வாக ரீதியாக யாரும் பாதிக்கப்படுவார்களானல், அவர்களுக்கு மனித உரிமை ஆணைக்குழு மூலம் உரிய தீர்வை பெறுவதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாக ஆளுநர் செயலக வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைத்தது.

No comments: