News Just In

10/29/2021 07:53:00 PM

அரசாங்க காணிகளில் வசித்துவரும் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம்!

மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வந்தாறுமூலை மேறகு பிரதேசத்தில் கடந்த மூன்று தசாப்தகாலத்திற்கு மேலாக உறுதிப்பத்திரமின்றி அரசாங்க காணிகளில் வசித்துவரும் ஒன்பது குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை 28.10.2021 மாலை நடைபெற்றது. காணியமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இந்நிகழ்வில் பிரதம அதிதயாகக் கலந்துகொண்டார்.

பதில் பிரதேசசெயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் என்.விமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த முப்பது மற்றும் நாற்பது வருடகாலதிற்கு மேலாக அரசாங்க காணிகளில் வசித்துவரும் இக்குடும்பங்கள் பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டபோதிலும் இதுவரை தமக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்படாதிருந்தது. எனினும் தற்போதைய அரசாங்க காலத்தில் உறுதிப்பத்திரங்கள் கிடைத்துள்ளதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதுடன் ஜனாதிபதி மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினர்.

.எச்.ஹுஸைன்

No comments: