News Just In

10/29/2021 07:09:00 AM

இன்று நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பா?

நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த போராட்டத்தில் ஈடுபடுவதாக 11 கட்சிகளின் தலைவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர்.அதன்படி இன்றய தினம் குறித்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

No comments: