News Just In

8/15/2021 06:45:00 PM

கந்தளாய் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மீனவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும் மீன்பெட்டியும் வழங்கி வைப்பு...!!


(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற சுயதொழில் புரிகின்ற மீனவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும் மீன்பெட்டியும் வழங்கும் நிகழ்வு இன்று (15) கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏசிஎம்.ஜவாஹிர் தலைமையில் கந்தளாய் பிரதேச சபையின் வளாகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

அல் ஹிக்மா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏசிஎம்.ஜவாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சுயதொழில் புரிகின்ற குறைந்த வருமானம் பெறுகின்ற பயனாளிகளுக்கே இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்க,கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏசிஎம்.ஜவாஹிர் மற்றும் அல்ஹிக்மா பவுண்டேசன் அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி இபாதத்துள்ளா (மௌலவி),உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.



No comments: