News Just In

8/08/2021 12:22:00 PM

திருகோணமலையில் வெவ்வேறு இடங்களில் சுற்றிவளைப்பு ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது...!!


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலையில் வெவ்வேறு சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த சுற்றிவலைப்பானது நேற்று (07) இடம் பெற்ற போதே இவ்வாறு கோனேசபுரி சுனாமி வீட்டுத் திட்ட பகுதியில் வைத்து குடும்பஸ்தர் (வயது 40) ஒருவர் 5 கிராம் 100 மில்லி கிராமும் எடை கொண்ட ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு நிலாவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு சுற்றி வலைப்பின் போது திருகோணமலை நகர் பகுதியில் வைத்து இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இரகசிய தகவலை அடுத்து ஹொரோப்பதானை பகுதியில் இருந்து திருகோணமலைக்கு கொண்டு சென்ற 41,42 வயதுகளையுடைய குடும்பஸ்தாரிடமிருந்து 2கிராம் 150 மில்லி கிராமும் உடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவரையும் கைது செய்து திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாகவும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: